About Us

About Us

போகர் சித்தாந்த சபை எனும் இந்த ஆன்மீக அமைப்பானது பழனியை சேர்ந்த திரு வசீகரன் என்பவரால் 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து வருகிறது..

திரு வசீகரன் அவர்கள் சுமார் 24 வருடங்களாக அதாவது 2001 முதல் சித்தர்களை பற்றியும் சித்த ரகசியங்கள் பற்றியும் நமது பாரம்பரிய கலாச்சாரம் பற்றியும் ஆய்வுகள் செய்து வருகிறார்..

போகர் சித்தாந்த சபை எனப்படும் இந்த ஆன்மீக அமைப்பின் நிறுவனர் திரு போகர் வசீகரன் அவர்கள் சித்தர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமாகிய குரு போகர் பெருமானை குருவாக கொண்டு வாழ்ந்து வருபவர்..அவரின் ஆசியையும் உபதேசத்தையும் பெற்றவர்..

மந்திரங்கள் பற்றியும் முத்திரைகள் பற்றியும் காற்றுகள் பற்றியும் இவர் பல்வேறு வகையான ஆய்வுகள் செய்து ஆச்சரியப்படத்தக்க முடிவுகளை கண்டுணர்ந்து அதனை மிக எளிமையாக அனைவருக்கும் பலன் கிடைக்கும் வகையில் தகுந்த ஆதாரத்துடன் பயிற்சிகளாக கொடுத்து வருகிறார்..

குறிப்பாக காற்றுகளை பற்றிய மற்றும் நாடிகளை பற்றிய இவரது ஆய்வுகள் பிரமிக்கத்தக்கதாக அமைந்துள்ளது..

மேலும் காற்றுகளைப்பற்றியும் நாடிகள் பற்றியும் சக்கரங்கள் பற்றியும் இதுவரை யாரும் சொல்லாத பல அற்புத ரகசியங்களை அனுபவபூர்வமாக ஆதாரத்துடன் விளக்கி சொல்வது இவரது சிறப்பம்சம் ஆகும்..

நாம் மறந்துவிட்ட கலாச்சார பொக்கிஷங்களையும் சித்த வித்தைகளையும் ரகசியங்களையும் மிக அழகாக அனைவரும் புரிந்து கொள்ளும் படியாக எளிமையாக ஆதாரத்துடன் விளக்குவது இவரின் சிறப்பம்சம்

உலகிலேயே தனக்குள்ளே தர்ப்பணம் கொடுக்கும் ரகசியத்தையும் தலையெழுத்து ரகசியத்தையும் அண்டபிண்ட ரகசியத்தையும் வெட்டவெளிச்சமாக உலகிற்கு சித்தர்களுக்கு அடுத்தபடியாக வெளிப்படுத்தி வருபவர்...

அடிப்படையில் இவர் சித்த மருத்துவத்தில் பட்டயப்படிப்பு முடித்தவர்..

யோகாவில் முனைவர் பட்டம் பெற்றவர்..

முத்திரைகளில் சிகிச்சை செய்வதில் மிகவும் வல்லவர்..

காற்றுகளை இயக்கும் சூத்திரம் படித்தவர்..

மிகசிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர்..

போகர் சித்தாந்த சபையின் மூலமாக தனஞ்செய தந்த்ரா மற்றும் ஈசான தந்த்ரா எனும் நேரடி பயிற்சிகளும் முத்திரை யோகா மற்றும் சம்பூர்ண யோகா எனும் ஆன்லைன் உபதேசங்களும் கொடுக்கப்பட்டு வருகிறது..

இதில் தனஞ்செய தந்த்ரா எனப்படுவது நம் தலையெழுத்தையே மாற்றி அமைக்கும் வகையிலான பயிற்சி முறையாகும்..நம் உடலில் பிரம்மா பெயரால் அழைக்கப்படும் காற்றான தனஞ்செயன் எனும் காற்றையும் நாற்சந்தி என்றும் நால்வேதம் என்றும் சித்தர்களால் அழைக்கப்பட்ட நான்கு காற்றுகளான முக்கியன் வைரவன் பிரவஞ்சனன் அந்தர்யாமி ஆகிய காற்றுகளையும் விவஸ்தன் எனும் காற்றையும் பயன்படுத்தும் ரகசியத்தை வித்தையை சித்தர்களுக்கு அடுத்தபடியாக உலகிலேயே முதன்முறையாக போகர் சித்தாந்த சபை மட்டுமே ஆதாரத்துடன் வெளிப்படுத்தி வருகிறது..

ஈசான தந்த்ரா எனப்படும் உபதேசமானது சித்தர்களில் சிவவாக்கியர் மற்றும் போகரால் இந்த உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ரகசிய சூத்திரம் ஆகும்..உலகிலேயே அண்டத்தில் உள்ளேதே பிண்டத்திலும் எனும் சித்தர்களின் அடிப்படை தத்துவத்தை அடிப்படையாக கொண்டு வெளியில் கொடுத்து வரும் தர்ப்பணத்தை நம் தேகம் எனும் ஆலயத்தில் கொடுக்கும் அபூர்வ உபதேசம் ஆகும்..இதனால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் பித்ரு தோஷம் குலதெய்வ சாபம் ஆகியவற்றை மிக எளிமையாக நிரந்தரமாக தீர்க்க முடியும்..

போகர் சித்தாந்த சபையின் மூலமாக ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சுமார் 1000 நபர்களுக்கு காலை மற்றும் மதிய உணவாக அன்னதானம் செய்யப்பட்டு வருகிறது..

மாதத்திற்கு இரண்டு நாட்கள் கலிக்கம் எனப்படும் கண்களில் மூலிகை சாறு பிழிந்து விடுவதின் மூலம் செய்யப்படும் சித்த மருத்துவ சேவை இலவசமாக செய்யப்படுகிறது..

9 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான முழுமையான கல்விச்செலவுகள் செய்யப்படுகிறது..